சுட்ட சொல்...!
நீ சுட்டிய சொல்லில்
சுருண்டு போனேன்.
ஒரு தீக்குச்சியின் உரசல்
வெடி மருந்து கிடங்கில்.
விரல் நீண்டது என் பக்கம்
குத்தியது உன் கண்களை
இருபக்க கூர் கொண்ட
கத்தி அச்சொல்
என் கூட படித்தவனே
என் மனதையும் படித்தவனே.
இதுவரை அப்படி
ஒரு சொல்
சொல்லியதில்லை.நீ
யாரோ சொன்னார்களாம்
அச்சொல்லை சொல்ல
தனியாக சொல்லியிருந்தால்
தவித்து இருக்க மாட்டேன்.
பொதுவில் சொன்னயாடா
போங்க வாங்க என்று.
போலித்தனமான உலகில்
உன் போடா வாடா
என் நிஜ உலகம்
அதை கலைத்து விடாதே

No comments:
Post a Comment