Tuesday, 30 April 2013

60 நொடி ... ஆர் யூ ரெடி

"60 நொடி ... ஆர் யூ ரெடி ? " என புதிதாக ஒரு நிகழ்ச்சி விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். முன்பு 2 பேர் ஓரணியாக இருந்து, இன்னொரு ஜோடி எதிரில் இருந்து விளையாடிய நிகழ்ச்சி தான்...இப்போது தனித்தனியே விளையாடுகிற மாதிரி மாறி வந்துள்ளது



60 நொடிகளில் குறிப்பிட்ட டாஸ்க் ஒன்றை முடிக்க வேண்டும். முடித்தவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்று விடுவர். முடிக்காதவர்களில் ஒருவர் அவுட் ஆகி வெளியேறுவார். 

10 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆளுக்கு 60 நொடி தான் ஆடுகிறார்கள். ஆக 10 நிமிஷத்தில் கேம் முடிஞ்சுடும். அப்புறம் எப்படி ஒரு மணி நேரம் இழுக்குறாங்க..? அதுக்கு தான் DD போன்ற ஆட்களை வைத்து ஏதாவது பேச வைக்கிறார்கள். 

தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக !

நல்ல நிகழ்ச்சி - மக்கள் தொலை காட்சியில் திருக்குறள் 

மக்கள் தொலை காட்சியில் தினம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. தொலைபேசியில் அவர்கள் டிவிக்கு கூபிடுபவர்களுக்கு ஒரு திருக்குறளின் முதல் வார்த்தை சொல்லி அந்த குறள் முழுமையும் சொல்ல சொல்கிறார்கள். வீட்டில் இருப்போரிடம் கேட்டு கொள்ள அனுமதித்தாலும் நம் மக்கள் எளிதான திருக்குறளை கூட தவறாகவே சொல்கிறார்கள். மக்கள் தொலை காட்சி சத்தமின்றி தமிழ் குறித்த சில நல்ல நிகழ்சிகள் வழங்கி வருவது பாராட்டுக்கு உரியது 

ஐ. பி. எல் கார்னர் 

சென்னை ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் தற்போது வலுவான நிலையில் - பாயிண்ட்டில் நம்பர் -1 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் நடக்கும் மேட்ச்களில் மறுபடியும் தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தது .. நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களுக்காக மகிழ்ச்சி! 

அவுட் ஆப் பார்ம் முரளி விஜய்யை எடுத்து விட்டு சாகாவை டீமில் எடுத்தது நன்கு வொர்க் அவுட் ஆனது.

கொல்கத்தா - சென்ற முறை பைனலில் சென்னையை வென்றது. அதற்கு பதிலடி தரும் விதமாய் இம்முறை 2 முறை கொல்கத்தாவுடன் ஆடி - 2 முறையும் சென்னை எளிதில் வென்றது. 2012-ல் கோப்பை வென்ற கொல்கத்தா செமி பைனல் செல்ல நாக்கு தள்ளி கொண்டு முழிக்கிறது. 

டில்லி, புனே, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நிச்சயம் செமி பைனல் செல்லாது என நினைக்கிறேன். மீதம் 5 அணிகளில் - 4 செமி பைனல் உள்ளே செல்லும். 

சீரியல் பக்கம்: விஜய் டிவி யின் " ஆபிஸ் " 

இந்த சீரியலில் வர்ற மாதிரி ஆபிஸ் எந்த ஊரில் இருக்குன்னு தெரியலை. சதா சர்வ காலமும் வேலையே செய்யாமல் பேசி கிட்டே இருக்காங்க. லவ் பண்றாங்க.பழைய காதல் பத்தி இழு - இழுன்னு இழுத்து சொல்றாங்க. ஹீரோ- ஹீரோயின் சீட் அல்லது காண்டீனில் தான் சீரியல் முழுக்க நகருது ! ஆபிஸ் என்கிற நல்ல களத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் செய்துள்ளனரே என்று தான் கடுப்பா வருது (வீட்டம்மணி மாற்றி மாற்றி பார்ப்பதால் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு ) 

விஜய் அவார்ட்ஸ் 

விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் முன் - அதற்கான Pre Cursor விழாவே சற்று கிராண்டாக நடத்தி வருகிறார்கள் விஜய் டிவியில். பல இயக்குனர்கள்- நடிகர் நடிகைகளை மேடைக்கு அழைத்து கேள்வி கேட்டு, சில பின்னணி பாடகர்கள் பாடி - ஆடி அமர்க்களப்படுது ! இந்த விழாவே ஒரு ஹாலில் தான் நடத்தினர் போலும் ! வழக்கம் போல் - விழாவிற்கு வந்த சில ஹீரோயின்களுக்காக தான் நம்ம பார்த்தது ஹீ ஹீ 

*****************

மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிக்களும் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்புகின்றன. இணையத்தில் கிடைத்த வரை ஒரு சிறு தொகுப்பு இதோ 

விஜய் டிவி

7.30 AM - சொன்னா புரியாது - சினிமா ரெவியூ 
8.00 AM - 3 பேர்; 3 காதல் சினிமா சிறப்பு பார்வை
8.30 AM - சூது கவ்வும் - சினிமா சிறப்பு பார்வை
10 AM - அஜீத் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி
11 AM - நண்பன் - திரைப்படம்
3 PM - என் தேசம் என் மக்கள்
4.30 P M - எதிர் நீச்சல் சினிமா சிறப்பு பார்வை
5.00 P M - கும்கி - திரைப்படம்

சன் டிவி

2.00 P M - மங்காத்தா - திரைப்படம் 
6.00 P M - ஏழாம் அறிவு - திரைப்படம்

ஜி தமிழ்

10 AM சமர் திரைப்படம்

கலைஞர் டிவி 

10 AM புத்தகம் திரைப்படம்
6 P M பையா திரைப்படம்
9 P M சூது கவ்வும் திரைப்படம் ஒரு பார்வை
9.30 P M நான் ராஜாவாக போகிறேன் திரைப்படம் ஒரு பார்வை
10 P M யாருடா மகேஷ் திரைப்படம் ஒரு பார்வை
10.30 P M சும்மா நச்சுன்னு இருக்கு (பவர் ஸ்டார் படம்) ஒரு பார்வை

Sunday, 24 February 2013


வாய் விட்டு சிரிங்க..





1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்
மருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.

2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா
குற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே

3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..
கிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா
சேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று

4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்

5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்
அப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா

6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..
ம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..
இதுக்குப் போய் இப்படி யோசிக்கறே
எங்கப்பா யோசிக்கலையே..அதுதான்.

பொன்விழா கண்ட கமல்..

                               


தமிழ் திரை உலகில்..நடிப்பு ஒன்றையே முழு மூச்சாய் எண்னிய நடிகர் திலகத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஒருவரைத்தான் சொல்லமுடியும்.களத்தூர் கண்ணம்மா படத்தில் 50 வருஷங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன்..சிறுவன் கமலுக்கு ஏ.வி.எம்., சந்தர்ப்பம் கொடுத்தது என்றால்..அவரை நடன இயக்குநர் ஆக்கியது டேன்ஸ் மாஸ்டர் தங்கப்பன் அவர்கள்.அவர் வாலிப வயதை அடைந்ததும்..பாலசந்தர் அவர்களால் அரங்கேற்றம் படத்தில் சாதாரணமான ஒரு பாத்திரம் தரப்பட்டது.பின்..கமலின் திறமையை உணர்ந்த பாலசந்தர் தொடர்ந்து அவருக்கு..அவர்கள், மன்மத லீலை,அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு என பல படங்களில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர் திறமையை வெளிக் கொணர்ந்தார்.பின்..கமலுக்கு எறுமுகம் தான்.

16 வயதினிலே சப்பாணி,கல்யாணராமன்,எல்லாம் இன்ப மயம்,கைதியின் டயரி,சிகப்பு ரோஜாக்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,சகலகலாவல்லவன்,மூன்றாம் பிறை, ராஜ பார்வை,இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான்,நாயகன்,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம் என பல படங்களில் தன் திறமையைக் காட்டினார்.மறக்கமுடியா படங்கள் அவை.

ஆனாலும்..கமல் என்னும் நடிகரை நான் முழுமையாக ரசித்த படங்கள்..

சலங்கைஒலி - தனது நாட்டிய திறமையயும் இப்படத்தில் காட்டினார்.கிளைமாக்ஸ் காட்சியில்..கிணற்றின் மேல் நடனமாடும்..இவர் ..எங்கே கிணற்றில் விழுந்து விடுவாரோ என மனம் பதைபதைக்க வைத்தார்.

மகாநதி-கமலின் மாஸ்டர் ஃபீஸ் படம் இது..இன்று நினைத்தாலும் கல்கத்தாக் காட்சி கண்முன்னேயே நிற்கிறது.

அபூர்வ சகோதரர்கள் அப்புவை மறக்கமுடியுமா?

அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.

தேவர்மகன்- சிவாஜி பெரியதேவராக நடிக்க..கமல் கதாநாயகன்..குறை சொல்லமுடியா நடிப்பு..சொந்த குரலில் கமல் பாடிய..இஞ்சி இடுப்பழகி...கமலை சகலகலாவல்லுநராக ஆக்கியது.

விருமாண்டி-இப்படத்தை வெளியிடுவதற்குள்..எத்தனை இடையூறுகள்..எல்லாம் தாண்டி விருமாண்டியாக கண் முன்னே நின்றார்.

ஒரு படத்தின் நாயகன் பாதி படத்திற்கு மேல் பெண் வேடம் தாங்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கினார் எனில் அது கமல் மட்டுமே..படம் அவ்வை சண்முகி

இந்தியனையும்..இந்திய தாத்தாவையும் மறக்கமுடியுமா?

படம் முழுதும் வசனமே இன்றி..ஊமைப்படங்களாக முதன் முதல் திரைப்படங்கள் உருவானது என்பதை நாம் அறிவோம்..ஆனால்..கலைமேதை கமல் அவர்கள்..படம் முழுதும் வசனமே இல்லாது..ஆனால்..படத்தின் பெயரை பேசும்படம் எனக் கொடுத்து..வெற்றியடைய வைத்தார்.

மற்றும் நாயகன்,புன்னகை மன்னன்,ஆளவ்ந்தான்,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் கமலின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

கமல்..பல பரீட்சார்த்த படங்களை எடுத்து..கையை கடித்துக் கொண்டவர்.உதாரணத்திற்கு ஹே ராம்...குணா,நம்மவர்கள்.. சொல்லலாம்.

வசூல்ராஜா..மருத்துவர்களின் போராட்டங்களுக்குப் பின் வெளியானது.இப்படம் ஹிந்தியில் வந்த போது..கண்டனம் சொல்லாத மருத்துவர்கள்..தமிழில் வரும் போது வெகுண்டு எழுந்தது..கமலின் துரதிருஷ்டமே.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் சேர்ந்து ..மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது போன்று 17 படங்களில் நடித்துள்ளார்.

கமல் தன்னால் நகைச்சுவை படங்களிலும் பிரகாசிக்க முடியும்..என பல படங்களில் நிரூபித்திருந்தாலும்..சமீப காலங்களில் வந்த..மைக்கேல் மதன காமராஜன்,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்சதந்திரம்,மும்பை எக்ஸ்பிரஸ்,தெனாலி,சிங்காரவேலன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

கமலின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் தசாவதாரம்..10 வேடங்களில் நடித்தார்.ஃபிளச்சரும்,பல்ராம் நாயுடுவும் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

கமல் படங்களையும்..அவர் நடிப்பையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால்...அதற்கு முடிவே இருக்க முடியாது..

அப்படிப்பட்ட உயர்ந்த மாபெரும் கலைஞன் மலையாளம்,ஹிந்தி படங்களிலும் திறமையைக் காட்டியுள்ளார்.

இன்று அக்கலைஞன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.

நேற்று சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் 1952ல் நடிக்க ஆரம்பித்து 1999 படையப்பாவரை 47 ஆண்டுகள் நடித்தார்.

இன்று கமல் என்ற கலைஞன் 1959ல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்து இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

இரு மாபெரும் கலைஞனும் நம் காலத்தில் வாழ்ந்ததற்கு நாம் பெருமைப் படுவோம்.

கமல் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

இந்தியாவில் கலைஞர்கள் வாழும் போது சரியாக போற்றப்படுவதில்லை..என்ற கூற்றை பொய்யாக்கி..கமலின் திறமையை அரசு மதித்து..அவருக்கு உரிய மரியாதையை தரட்டும்..

வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

வாய் விட்டு சிரிங்க...




தயாரிப்பாளர்-பொங்கல் படங்களிலேயே உங்க படம் தான் பார்க்கிறார் போல இருக்கு
நடிகர்-அப்படியா
தயாரிப்பாளர்-ஆமாம்..மற்ற தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம்தான் பார்க்க முடியுது.உங்க பட தியேட்டர்ல தான் யாருமில்லை

2)தலைவர் சுடுகாட்டில என்ன பண்றார்..
அவர் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்கச் சொன்னாராம் டாகடர்..அதைத்தேடிக்கிட்டு இருக்கார் பிடிக்க

3)தலைவர் போலீஸ் நிலயத்திற்கு எதற்குப் போனார்..
அவரது துணைவியின் கொடுமை தாங்கலையாம்

4)தயாரிப்பாளர்-ஒவ்வொருவர் தன் படம் ஓட போட்டியெல்லாம் வைக்கறாங்க..அது போல நாமும் ஒரு போட்டி வைக்கலாம்
இயக்குநர்-என்ன போட்டி வைக்கலாம்
தயாரிப்பாளர்-நம்ம படத்தின் கதை என்னன்னு கண்டுபிடிக்கறவங்களுக்கு பரிசு கொடுக்கலாம்

5)துறவி 1- நீங்க துறவியானதற்கு காரணம்
துறவி 2-.........நடிகரைப் போட்டு படமெடுத்தது தான் காரணம்..ஆமாம்..நீங்க..
துறவி1- என்னை உங்களுக்குத் தெரியல..அந்த படத்தை இயக்கியவன் நான்

6)நிருபர்-மக்களுக்கு உங்கள் பொங்கல் செய்தி..
தலைவர்-என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய் போவார்கள்..கெட்டு அலைவார்கள்..நாட்டை விட்டு ஓடுவார்கள் என்ற என் பொங்கல் வாழ்த்தை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

7)அந்த மருத்துவர்தான் தலைவரின் கரத்தை பலப்படுத்தியவர் என்கிறார்களே
ஆமாம்..தலைவரின் கை எலும்பு முறிந்த போது அவர்தான் சிகிச்சை செய்தாராம்.