Sunday, 24 February 2013


குடை - மழை - குளிர் காய்தல்


குடை - மழை - குளிர் காய்தல்  



இல்லாத நேரம் இருக்கிறதைத் தேடிப்பிடித்து 
கிடைக்கிறதைப் பெற்றுய்ந்து 
பாவம், புண்ணியம் துரோகம் பாராது 
அது மாறாது இது மாறாது என்பது..
மாற்றம் ஒன்றே மாறாதது 
இதுவே கடைசி - அன்று சொன்னது 
இன்று???

ஆழ் மனது அறிவிப்பது அப்படியே நடக்கிறது 
அவன் - இவன் அப்பிடித் தான் - இப்பிடித் தான் 
எல்லாம் அப்படியே தான்...

மனதுகளை முகம் பார்த்தோ, முகங்கள் பார்க்காமலோ 
வாசிக்க முடிகிறது 

நீ செய்த முன்வினை 
மீண்டும் உனக்கே என்பது விதி 

இனி எல்லாம் நல்லபடி.. 
நம்புங்கள் நடக்கும் 
கடைசி வாய்ப்பு..
எத்தனை கேட்டாச்சு.. 
நம்பித்தானே இவ்வளவு காலமும் 

நம்பிக்கை எல்லாம் இங்கே சும்மா சம்பிரதாய வார்த்தை 
உறுதிமொழிகள் எல்லாம் உயிரும் உணர்வும் இல்லாதவை 

பிரதியீடுகள் மலிந்துபோன காலம் இது..

கோக் இல்லாவிட்டால் பெப்சி..
wifi இல்லாவிட்டால் 3G

ஒரே நேரத்தில் பலரோடு.. 
ஒரே நேரத்தில் பலராய்.. 
சீ... எப்படி முடிகிறது?

குற்றவாளி அவனே.. 
அவனே தான்.. 

ஆனாலும் திருந்துவான் ?? 
ம்ஹூம்...

மழைநேரம் குடை போல இவன்... 
நனைவான்.. 
வெயில்நேரம் குடைபோல இவன்..
காய்வான்.

தேவையான நேரங்களில் இவன்.... 

போகட்டும் காலம்... 

No comments:

Post a Comment